டிசம்பர், 2015 | நமது அனுதின மன்னா Tamil Our Daily Bread

Archives: டிசம்பர் 2015

தொடர்ச்சியாக பறந்து செல்வது

ஆலன் டெனன்ட் எழுதியுள்ள இறக்கையின் மேல் என்ற புத்தகத்தில், பிற பறவைகளைக் கொன்று தின்னும் இராஜாளி என்ற கழுகினம் இடம் பெயர்ந்து செல்லும் முறையைத் தொடர் பதிவு செய்வதற்காக, அவர் செய்த முயற்சிகளைப் பற்றி அவர் எழுதியுள்ளார். அழகு, வேகம், செயல்படும் திறனுடைய அப்பறவைகள், முற்காலத்தில் அரசர்கள், பிரபுக்கள் இவர்களுடைய வேட்டைத் தோழனாக பயன்படுத்தப்பட்டன. ஆனால் 1950களில் மிக அதிகமாக பயன்படுத்தப்பட்ட D.D.T என்ற பூச்சிக் கொல்லி மருந்தினால், அவைகளின் இனப்பெருக்கத்திறன் பாதிக்கபட்டதால், அவை வெகுவேகமாக அழிந்து கொண்டிருக்கும் உயிரினங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

அழிந்து…

இளைப்பாற ஓர் அழைப்பு

ஒரு மருத்துவமனையில் அவசரகால மருத்துவ வார்டில் சேர்க்கப்பட்டிருந்த எனது சிநேகிதனின் படுக்கையண்டையில் நான் நின்று கொண்டிருந்த பொழுது, அங்கிருந்த மற்ற நோயாளிகளின் வேதனைக் குரல் என்னை அசைத்தது. என் நண்பனுக்காகவும் மற்ற நோயாளிகளுக்காகவும் நான் ஜெபித்த பொழுது, இந்த பூமியில் நமது வாழ்க்கை எவ்வளவு நிலையற்றது என்பதை உணர்ந்தேன். பின்பு ஜிம் ரீவ்ஸ் அவர்களால் பாடப்பட்டுள்ள இந்த உலகம் நமக்கு சொந்தமான வீடல்ல “நாம் அதன் வழியாக கடந்து செல்கிறவர்களாக இருக்கிறோம்” என்ற ஒரு நாட்டுப்புறப் பாடலை நினைவு கூர்ந்தேன்.

நமது உலகம் வேதனை,…

ஆர்வம் இல்லாமையை தவிர்த்தல்

நிதி திரட்டுவதற்கான நிகழ்ச்சியின் இறுதிக்கட்ட வேலைகளை முடிக்க அழகிய சேலைகளைக் கட்டிய பெண்கள், அங்கும் இங்கும் வேகமாக சென்று கொண்டிருந்ததால், அந்த அறை முழுவதும் மனதை ஈர்க்கக் கூடிய பலவர்ண நிறங்களால் நிறைந்திருந்தது. இந்தப் பெண்கள் முன்பு இந்தியாவில் வாழ்ந்தவர்கள். இப்பொழுது அமெரிக்க ஐக்கிய நாட்டில் வாழ்கிறார்கள். ஆயினும் அவர்களது சொந்த நாட்டைப் பற்றிய கரிசனையுடன் இருந்தார்கள். இந்தியாவில் மனவளர்ச்சி குன்றிய பிள்ளைகளுக்கான ஒரு கிறிஸ்தவ பள்ளியின் பொருளாதாரத் தேவையைப்பற்றி கேள்விப்பட்டதோடு நின்று விடாமல், அப்பள்ளியின் தேவையைச் சந்திக்க முழு மனதோடு செயல் பட்டார்கள்.…

அடைக்கலமான இடம்

பிரிட்டிஷ் கொலம்பியாவில், வேன்கூவர் நகரத்தில் வாழ்ந்து வந்த வீடற்ற மக்களுக்கு ராத்தங்க ஒரு புது வித தூங்கும் இடம் கிடைத்தது. உள்ளுரிலிருந்த ரெயின் சிட்டி ஹவுசிங் என்ற சேவை நிறுவனம் தற்காலிக தங்கும் இடமாக மாற்றப்படுவதற்கான சிறப்புத் தன்மைகள் கொண்ட பெஞ்சுகளை உண்டாக்கினது. அந்த பெஞ்சுகளில் சாய்ந்து கொள்ள பயன்படும் பின் பகுதி காற்று, மழையிலிருந்து ஒரு மனிதனை பாதுகாக்கும் முறையில் ஒரு உறைபோல இழுக்கப்படக் கூடியதாக இருந்தது. இரவு நேரங்களில் தூங்கக் கூடிய இந்த இடங்களை எளிதாகக் கண்டு கொள்ளத்தக்கதாக “இது ஒரு…

தொடர்புடைய தலைப்புகள்

> odb

இயேசுவிடம் ஓடுதல்

 பாரீஸ_க்கு ஒரு பயணத்தில், பென்னும் அவனது நண்பர்களும் நகரத்தில் உள்ள புகழ்பெற்ற அருங்காட்சியகம் ஒன்றிற்கு சென்றிருந்தனர். அவன் ஓவியக்கலை மாணவனாய் இல்லாதபோதிலும், யூஜின் பர்னாண்ட் வரைந்த “உயிர்த்தெழுந்த நாளின் அதிகாலையில் கல்லறைக்கு ஓடிய பேதுருவும் யோவானும்” என்று தலைப்பிடப்பட்ட அந்த ஓவியத்தைக் கண்டு ஆச்சரியத்தில் வியந்தான். வார்த்தைகளை பகிராத அந்த ஓவியத்தில் இடம்பெற்றிருந்த பேதுரு மற்றும் யோவானின் முகங்கள் எண்ணற்ற உணர்வுகளை பகிருகின்றது. பார்வையாளர்களை அவர்களின் உணர்வுக்குள் நிறுத்தி, அவர்களை ஆச்சரியத்துக்குள்ளாக்குகிறது.  
யோவான் 20:1-10இன் பிரகாரம், அந்த ஓவியமானது இயேசுவின் வெறுமையான கல்லறைக்கு நேராய் ஓடிய இரண்டுபேரை காண்பிக்கிறது (வச. 4). அந்த பிரம்மாண்ட ஓவியம் உணர்ச்சிபொங்கிய இரண்டு சீஷர்களின் உணர்வுகளை படம்பிடித்திருக்கிறது. அந்த கட்டத்தில் அவர்களுடைய விசுவாசம் இன்னும் முழுமைபெறவில்லையெனினும், அவர்கள் சரியான திசையை நோக்கி ஓடினார்கள். உயிர்த்தெழுந்த இயேசுவும் அவர்களுக்கு தன்னை வெளிப்படுத்திக் காண்பித்தார் (வச. 19-29). அவர்களுடைய இந்த தேடுதல், நூற்றாண்டுகளாய் இயேசுவைத் தேடுவோரின் தேடலுக்கு ஒத்தது. இயேசுவின் கல்லறை அருகே அக்காலகட்டத்தில் நாம் இல்லாதிருந்தாலும், அந்த அழகான ஓவியத்தை நாம் பார்த்திராவிடினும், நற்செய்தியை நம்மால் தெளிவாய் பார்க்கமுடியும். நமக்கு சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் குழப்பங்கள் இருந்தாலும், இயேசுவும் அவருடைய அன்பும் இருக்கும் திசை நோக்கி ஓடுவதற்கு வேதம் நம்மை உற்சாகப்படுத்துகிறது. நாளைக்கு உயிர்தெழுதலின் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடும்போது, “உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடினீர்களானால், என்னைத் தேடுகையில் கண்டுபிடிப்பீர்கள்” (எரேமியா 29:13) என்னும் வார்த்தையை நினைவுகூருங்கள்.  

செந்நீர்

ஸ்காட்டிஷ் தேசிய ஓவிய கண்காட்சி வழியாக நடந்து செல்லும்போது, டச்சு ஓவியர் வின்சென்ட் வான் கோக் வரைந்த பல ஒலிவ மர ஓவியங்களில் ஒன்றின் அழகு என்னை வெகுவாய் ஈர்த்தது. பல வரலாற்று நிபுணர்கள், இந்த வேலைப்பாடு ஒலிவ மலையில் உள்ள கெத்செமனே தோட்டத்தில் இயேசுவுக்கு உண்டான அனுபவத்தால் ஈர்க்கப்பட்டதாக நம்புகிறார்கள். அந்த ஓவியத்தில் என்னை அதிகமாய் ஈர்த்தது என்னவென்றால், அந்த பழைய ஒலிவ மரங்களின் மீது சில சிறிய சிவப்பு தீற்றல்கள்.  
ஒலிவ மலையில் ஒலிவ மரங்கள் அதிகம் இடம்பெற்றிருக்கும் என்பதை அறிந்திருந்த இயேசு, அந்த இரவில் ஜெபிப்பதற்காய் அங்கு கடந்த சென்றார். தன் சீஷர்களில் ஒருவனான யூதாஸ் தன்னை காட்டிக்கொடுப்பான் என்பதையும் முன்னறிவித்தார். அந்த காட்டிக்கொடுக்கப்படுதல் சிலுவையில் அறையப்படுதலுக்கு வழிவகுக்கும் என்பதை அறிந்த இயேசு கவலையினால் நிரப்பப்பட்டார். அவர் ஜெபிக்கும்போது, “அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையிலே விழுந்தது” (லூக்கா 22:44). அந்த குறிப்பிட்ட வெள்ளிக்கிழமையில், தன்னுடைய அடிக்கப்படுதலுக்கும் பாடுகளுக்கும் இயேசு ஆயத்தமாயிருந்தார் என்பதற்கு அவருடைய அந்த கெத்சமெனே ஜெபமே ஆதாரமாயிருக்கிறது.  
வான் கோக் வரைந்த ஓவியத்தில் சிதறியிருந்த அந்த இரத்தத் துளிகள், “மனுஷகுமாரன் பல பாடுகள்பட்டு... ஆகாதவனென்று தள்ளப்பட்டு” (மாற்கு 8:31) உபத்திரவத்தை அனுபவிப்பார் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது. உபத்திரவம் அவருடைய பாதையில் அனுமதிக்கப்பட்டாலும், அது அவருடைய வாழ்க்கையை மேற்கொள்ளவில்லை. மரணத்தின் மீது இயேசு கொண்ட ஜெயமானது, நம்முடைய உபத்திரவத்தை மேற்கொள்ளச் செய்து, தேவன் நமக்கு ஆயத்தப்படுத்தியிருக்கும் அழகான வாழ்க்கைக்கு நம்மை தகுதிப்படுத்துகிறது.

சேவை செய்யும் சவால்

பதிமூன்றே வயது நிரம்பிய டேஏவியன் மற்றவர்களுக்கு சேவை செய்யும் சவாலை மேற்கொண்டான். கோடை விடுமுறையின் போது, தன்னுடைய ஐம்பது புல்வெளிகளை இலவசமாக வெட்டும்படி குழந்தைகளுக்கு அழைப்புக் கொடுத்த ஒரு மனிதனைப் பற்றிய கதையை அவனும் அவனது அம்மாவும் கேட்டிருக்கிறார்கள். இராணுவ வீரர்கள், ஒற்றை அம்மாக்கள், ஊனமுற்றவர்கள், அல்லது உதவி தேவைப்படும் எவருக்கும் உதவுவதே அவர்களின் நோக்கம். அந்த புல்வெளிகளின் சொந்தக்காரர், வேலையின் முக்கியத்துவத்தையும் மக்களுக்கு நன்மை செய்வதின் அவசியத்தையும் அவர்களுக்கு விளங்கச்செய்தார். கோடையின் வெயில் சுட்டெரிக்கும் போதும், மற்றவர்களுக்குச் சேவை செய்வதை விரும்பிய டேஏவியன் 
அடிக்கும்போது அந்த சவாலை நேர்த்தியாய் செய்து முடித்தார். மற்றவர்களுக்குச் சேவை செய்யும் சவால் கிறிஸ்தவர்களுக்கும் உண்டு. இயேசு மரிப்பதற்கு முந்தின நாள் இரவில், அவர்சீஷர்களோடு பந்தியிருந்தார் (யோவான் 13:1-2). அவர் கடந்துபோகப்போகிற உபத்திரம் மற்றும் மரணம் என்னும் பாதையைக் குறித்து அவர் நன்கு அறிந்திருந்த போதிலும், அவர் ஒரு துண்டை எடுத்து தன்னுடைய இடுப்பில் கட்டிக்கொண்டு சீஷர்களின் பாதங்களை கழுவினார் (வச. 3-5). மேலும் "ஆண்டவரும் போதகருமாகிய நானே உங்கள் கால்களைக் கழுவினதுண்டானால், நீங்களும் ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள்” என்று அவர்களிடம் வலியுறுத்தினார் 
(໙. 14). நம்முடைய தாழ்மையான மாதிரியாகிய இயேசு மக்களிடம் கரிசனை காண்பித்தார். அவர் குருடருக்குப் பார்வையும், வியாதியஸ்தருக்கு சுகமும் கொடுத்து இராஜ்யத்தின் நற்செய்தியைப் போதித்து, தன் சிநேகிதருக்காகத் தன்னுடைய ஜீவனையும் கொடுத்தார். கிறிஸ்து உங்களை நேசிப்பதால், இந்த வாரத்தில் யாருக்கு சேவை செய்யவேண்டும் என்று அவர்விரும்புகிறார் என்று அவரிடத்தில் கேளுங்கள்.